புழல் சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் விடுதலை


புழல் சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் விடுதலை
x

அண்ணா பிறந்தநாளை ஒட்டி, புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை! செய்யப்பட்டனர்

சென்னை,

தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை! செய்யப்பட்டனர். கடந்த 24ம் தேதி முதற்கட்டமாக 15 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று 21 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி உள்பட 22 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்


Next Story