253 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


253 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:47 PM GMT)

253 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் உள்ள தூய ஆவியானவர் சர்ச் முன்பாக நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதனை ஏற்றி வந்த ஆர்.எஸ்.மங்கலம் கோழியார் கோட்டை பகுதியை சேர்ந்த சித்திரவேல்(வயது 23), புல்லமடை மேற்கு தெருவை சேர்ந்த ராஜகுமார்(44) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 253 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story