தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா


தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு;   தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா
x

கோப்பு படம்

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 304 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னை மாவட்டத்தில் 8 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேருக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், கடலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவடங்களில் தலா ஒருவருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


Next Story