கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 பேர் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர். இவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குவதற்காக உடைகளை வெளியே வைத்து உள்ளார்.

இதனை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கழிவுநீர் தோட்டிக்குள் எட்டிப்பார்த்து உள்ளனர். அப்போது 3 பேர் உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 3 பேர் உயிரிழந்த தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். அதில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


Next Story