ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி..!


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி..!
x
தினத்தந்தி 6 March 2023 8:29 AM GMT (Updated: 6 March 2023 8:35 AM GMT)

கிருஷ்ணகிரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷுக்கும், அம்முவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அம்மு, தனது 7 வயது மகள், 4 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கல்லாவி ரெயில் தடத்தில் சடலங்களை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.


Next Story