சேலத்தில் வாலிபரை விபசாரத்துக்கு அழைத்த 3 பேர் கைது

சேலத்தில் வாலிபரை விபசாரத்துக்கு அழைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்
மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் சுந்தரேசனை விபசாரத்திற்கு அழைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து வாலிபரை விபசாரத்திற்கு அழைத்த இடங்கணச்சாலை பகுதியை சேர்ந்த 29 வயது பெண், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் மற்றும் இளம்பிள்ளையை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





