கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x

கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 30). பா.ம.க. பிரமுகரான இவர் தனியார் கால்டாக்சியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரை இவரது கார் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு வந்த கார் டிரைவர் அர்ஜுன் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வல்லம் பஸ் நிலையம் அருகே வீசப்பட்டார்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கார் நிறுவனத்தில் பதிவு செய்த செல்போன் எண்ணை வைத்து பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (26), திருமூர்த்தி (22), கட்டிமுத்து (25), லோகநாதன் (25), பெரியசாமி என்கிற பிரசாந்த் (18) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பிரசாந்த், கட்டிமுத்து, திருமூர்த்தி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story