மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு, மேலகுட்டப்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு மது விற்ற ஜீவானந்தம் (வயது 54), சுதாகர் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 20 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு அருகே மது விற்றதாக கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கோகுல் (23) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story