புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

திண்டிவனம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கிடங்கல் - 1 பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கூறி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக வைரபுரத்தை சேர்ந்த வசந்தா (60), கீழ்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (46) ஆகியோரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





