பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே பரம்பூர் வாரச்சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பரம்பூர் பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 53), ஆறுமுகம் (35), போலம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (26), முத்தம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ. 300 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story