சென்னையில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது


சென்னையில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
x

மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயின் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை குரோம்பேட்டை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹெராயின் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் பம்மல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த 60 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது உறுதியான நிலையில், போலீசார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்தனர்.


Next Story