தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கும்...!


தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கும்...!
x

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

சென்னை,

இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும்.

நாளை (17-ந்தேதி) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

18-ந்தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story