திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய 4 பேர் கைது; இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது அம்பலம்


திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில்  பரப்பிய 4 பேர் கைது; இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது அம்பலம்
x

திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பரப்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் இருவரையும் சிக்க வைக்க வீட்டில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தது அம்பலமானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பரப்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் இருவரையும் சிக்க வைக்க வீட்டில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தது அம்பலமானது.

கள்ளத்தொடர்பு

குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த திருமணமான 35 வயதுடைய பெண் ஒருவர் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அந்த வாலிபர் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

இதனை அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்கள் ரகசியமாக கண்காணித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணையும், வாலிபரையும் அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது.

படுக்கை அறை காட்சி பரவியது

இந்தநிலையில் இளம்பெண்ணும், வாலிபரும் உல்லாசமாக இருக்கும் படுக்கை அறை காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக அந்த பகுதியில் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த மனுவில், எனது வீட்டில் ரகசியமாக கேமரா வைத்து எனது அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் பரப்பி உள்ளனர். அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

3 மாணவர்கள் கைது

பின்னர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பரப்பிய கும்பல் யார்? என தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு நடத்தினர்.

இதில் அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (வயது 37), சுமேஷ் (20), நிகேஷ் (20) மற்றும் பிபின் (20) ஆகியோர்தான் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நேற்று 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட சுமேஷ், நிகேஷ், பிபின் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள். சந்தோஷ் கூலி தொழிலாளி ஆவார்.

பரபரப்பு தகவல்

இளம்பெண்ணையும், வாலிபரையும் சிக்க வைக்க திட்டமிட்டு அந்த பகுதியை சேர்ந்த கும்பல் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளத்தொடர்பை கைவிடும்படி கும்பல் எச்சரித்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் இளம்பெண்ணின் படுக்கை அறையில் ரகசியமாக செல்போன் கேமராவை வைத்து அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த காட்சியை தங்களுடைய வாட்ஸ்-அப் மூலம் பரப்பியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் கேமரா வைத்து இளம்பெண், வாலிபர் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story