படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது


படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது
x

படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

நிலத்தை அபகரிக்க முயற்சி

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 50). இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆதனூர் சாலையில் வரதராஜபுரம் பகுதியில் 1.37 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்தவர்கள் மீது நவடிக்கை எடுக்கக்கோரி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் போலீஸ் இணை கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் மணிமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது

விசாரணையில், சுதாகரின் அசல் ஆவணங்களை தொலைத்துவிட்டதாக போலியான சான்று பெற்று போலியான ஆவணங்கள் தயாரித்து பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது பெயரில் பவர் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பெருங்களத்தூரை சேர்ந்த செந்தில் (வயது 35), ஆனந்தன் (36), ஹரி கிருஷ்ணன் (32), காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த விஜய் (37) ஆகியோரை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


Next Story