முன்விரோத தகராறில் 4 பேர் கைது


முன்விரோத தகராறில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2023 6:45 PM GMT (Updated: 28 May 2023 6:46 PM GMT)

திண்டிவனம் அருகே முன்விரோத தகராறில் 4 பேர் கைது

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் ஏழுமலை(வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் தன்ராஜ்(21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் இது குறித்து அவர்கள் ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் தன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் தன்ராஜ் கொடுத்தபுகாரின் பேரில் ஏழுமலை, ராஜேஷ்(21), கோபால்(20) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story