தமிழகத்தில் இன்று மேலும் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று மேலும் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 469 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 233 ஆண்கள் மற்றும் 236 பெண்கள் அடங்குவார்கள்.

அதிகபட்சமாக சென்னையில் 129 பேருக்கும்,செங்கல்பட்டில் 41 பேருக்கும், கன்னியாகுமரியில் 36 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 4 பேர் உள்பட மொத்தம் 36 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 2 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story