அக்.15-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை-சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு


அக்.15-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை-சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
x

கோப்புப்படம்

அக்.15-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம்.

இந்நிலையில், பொதுமக்கள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், 2022-23ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத அபராதத் தொகையையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2021 -22ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகி உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம சென்னை செயலி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும், இ சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story