சென்டிரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


சென்டிரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ புகையிலை பொருட்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு முத்து குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடைமேடை 4-ல் வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் ஏறி சோதனையிட்டனர். அதில் சந்தேகிக்கும்படியான 2 நபர்கள் வைத்திருந்த பைகளை ஆய்வு செய்ததில், அவற்றில் 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கன்னியா (வயது 32), மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஞானசியாம் (47) என்பதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story