தஞ்சை பெரிய கோவிலில் ரூ.52 லட்சம் உண்டியல் காணிக்கை


தஞ்சை பெரிய கோவிலில் ரூ.52 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2023 9:32 PM GMT (Updated: 25 Sep 2023 9:58 PM GMT)

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் மூலம் ரூ.52 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 54 கிராம் தங்கம், 616 கிராம் வெள்ளி, 515 வெளிநாட்டு நோட்டுகளும் கிடைத்தன.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் மூலம் ரூ.52 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 54 கிராம் தங்கம், 616 கிராம் வெள்ளி, 515 வெளிநாட்டு நோட்டுகளும் கிடைத்தன.

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகியம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த முறை 2 மாதங்களுக்குப்பிறகு நேற்று பல்வேறு சன்னதிகளில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் அந்த உண்டியல்கள் உதவி ஆணையர்கள் கவிதா (அரண்மனை தேவஸ்தானம்), அனிதா (புதுக்கோட்டை), செயல் அலுவலர் மாதவன், ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ரூ.52 லட்சம் காணிக்கை

இதில் ரூ.52 லட்சத்து 14 ஆயிரத்து 229 வருமானமாக கிடைத்தது. மேலும் 54 கிராம் தங்கம், 616 கிராம் வெள்ளியும், இது தவிர வெளிநாட்டு நோட்டுகள் 515-ம் கிடைத்தன.


Next Story