மாண்டஸ் புயல் தாக்கம்: சென்னையில் 644 டன் மரக்கழிவுகள் அகற்றம்...!


மாண்டஸ் புயல் தாக்கம்: சென்னையில் 644 டன் மரக்கழிவுகள் அகற்றம்...!
x

சென்னையில் மாண்டஸ் புயலினால் விழுந்த 644 டன் மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது

சென்னை,

மாண்டஸ் புயலினால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன.

இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினார்கள்.

அந்தவகையில் 644.6 டன் எடையுள்ள மரக்கழிவுகள் டிப்பர் லாரிகளின் மூலம் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Next Story