வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி


வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி
x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பும்போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளாதவும், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.


Next Story