ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.81¾ லட்சம் வருவாய்


ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.81¾ லட்சம் வருவாய்
x

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.81¾ லட்சம் வருவாய் கிடைத்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.81 லட்சத்து 71 ஆயிரத்து 112 ரொக்கமும், 179 கிராம் தங்கமும், 1,524 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 361 -ம் இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story