8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை


8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 7:46 PM GMT)

கோவை அருகே 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை அருகே 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


8-ம் வகுப்பு மாணவன்


கோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்த 40 வயதான பெண், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவர் தனது 14 வயதான மகனுடன் வசித்து வருகிறார். அந்த சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்த நிலையில் அந்த ஆசிரியை தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் 8-ம் வகுப்பு மாணவன் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது மாணவரின் உறவினரான கட்டிட தொழிலாளி ராம்ராஜ் (45) அங்கு வந்தார்.


பாலியல் தொல்லை


அவர் அந்த மாணவனிடம் விளையாடலாம் என்று கூறி தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த மாணவன் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை வெளியே சொல்ல வில்லை.


இந்த நிலையில் அந்த மாணவனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மாணவனின் தாயார் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். அப்போது டாக்டர்கள் அந்த மாணவனை பரிசோதனை செய்தபோது அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி அவர்கள் அந்த மாணவனின் தாயாரிடம் தெரிவித்தனர்.


போக்சோவில் கைது


இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை, தனது மகனுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராம்ராஜை கைது செய்தனர்.


Next Story