பல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்


பல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Dec 2023 10:04 AM GMT (Updated: 9 Dec 2023 10:07 AM GMT)

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யகனி. இவர், தனது 4 வயது மகள் மற்றும் உறவினருடன் பல்லடம் நோக்கி ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.

பல்லடம் தாராபுரம் சாலை அருகே ஆட்டோ வந்துகொண்டிருந்தபோது, எதிரே கரூர் நோக்கி சென்ற கார் ஒன்று, திடீரென வேகமாக ஆட்டோவின் மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story