வாலிபரை பாட்டிலால் குத்தியவர் மீது வழக்கு

வாலிபரை பாட்டிலால் குத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் கல்விநகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 35). அப்பகுதியில் நடந்து சென்றபோது இவரும் எதிரே வந்த அதே ஊரை சேர்ந்த சுரேந்தரும்(32) மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் சுரேந்தர் கையில் இருந்த கண்ணாடி பாட்டிலால் குத்தியதில் விஜயகுமார் நெஞ்சில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





