கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி


கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
x

கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த கீழபொய்கைபட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 30). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று காலை அவரது ஊரிலேயே கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட முயன்றபோது சங்கர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story