நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:46 PM GMT)

கடனை செலுத்திய பிறகும் ஆட்டோ உரிமைத்தை கொடுக்கவில்லை: நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவர் ஆட்டோ வாங்குவதற்காக அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதற்காக பல தவணைகள் மூலம் வட்டியும் அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டார். ஆனால், தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் அசல் உரிமத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால், சுந்தர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுந்தர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நிதி நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட சுந்தருக்கு ஆட்டோவின் அசல் உரிமத்தை வழங்க உத்தரவிட்டனர். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அபராத தொகையை நஷ்ட ஈடாக சுந்தருக்கு வழங்க வேண்டும் என்றும் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story