உப்பனாற்றில் பிணமாக மிதந்த மீனவர்


உப்பனாற்றில் பிணமாக மிதந்த மீனவர்
x

கடலூர் துறைமுகம் அருகே உப்பனாற்றில் பிணமாக மிதந்த மீனவர் செய்யப்பட்டாரா? என்பது குறித் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் துறைமுகம் அருகே உள்ள தம்மன்னாம்பேட்டையை சேர்ந்தவர் பழனிவேல் மகன் கோடி(வயது 28). மீனவரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் துறைமுகத்தில் உள்ள விசைப்படகில் இரவு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின் கோடியை காணவில்லை என்ற புகாரின் பேரில், கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி உப்பனாற்றில் கோடி பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடலூர் துறைமுகம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில், கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடி கொலை செய்யப்பட்டாரா? அல்லது படகில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story