விளையாடி கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை


விளையாடி கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை
x

சென்னையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சென்னை

சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனாரான இவர், கடந்த 2020-ம் ஆண்டு விளையாடி கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவியை வாயைப் பொத்தி வீட்டுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story