மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து

அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 பேர் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36) மற்றும் வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண் (46) ஆகிய இருவரும் நேற்று இரவு திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை அருகே வந்த போது எதிரே காஞ்சீபுரத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






