நீட் கோச்சிங் சென்டர் போகாமலேயே சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவன்


நீட் கோச்சிங் சென்டர் போகாமலேயே சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவன்
x

குரோம்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவர் நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

சென்னை,

நீட் தேர்வில் 503 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவரை பலர் பாராட்டி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவர் சவுந்தரராஜன், நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து நீட் தேர்வில் தனி கவனம் செலுத்தியதாகவும், பயிற்சி மையத்திற்கு செல்லாமலே தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக மாணவர் நெகிழ்ந்துள்ளார்.


Next Story