தமிழ் எழுத்துக்களால் உருவான பிரமாண்ட திருவள்ளுவர் சிலை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்


தமிழ் எழுத்துக்களால் உருவான பிரமாண்ட திருவள்ளுவர் சிலை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 Jan 2024 12:56 AM GMT (Updated: 6 Jan 2024 1:02 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்

சென்னை,

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது. திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த கம்பீரமான சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்து செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் செலவில் குறிச்சிகுளம் உட்பட கோவையின் ஏழு பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரி முகப்பு மேம்படுத்தப்பட்டு, தமிழர் கலாசாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் சிற்பங்கள் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் கோவை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.


Next Story