சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

சென்னை,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். முன்னதாக வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதித்தனர்.

சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மாலை 4:30 மணியில் இருந்து 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story