மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.

தென்காசி

கடையநல்லூர்:

மதுரை கொடிமங்கலம் புதூரைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் சாரதி (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், ஷோஜன் (1) என்ற மகனும் உள்ளனர். சாரதி நேற்று முன்தினம் இரவில் குற்றாலத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று, சாரதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story