கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது


கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது
x

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). இவர் குழந்தாகவுண்டனூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பசுபதிபாளையத்தை சேர்ந்த பிரபு (40) என்பவர், இளங்கோவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார். இதுகுறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story