அண்ணனின் இறுதிச்சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு


அண்ணனின் இறுதிச்சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
x

ஆர்.கே. பேட்டை அருகே அண்ணனின் இறுதிச் சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

ஆர்.கே.பேட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 53). கூலி தொழிலாளி. இவரது அண்ணன் சிலோர் மணி (58). இவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

அண்ணனின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வேலு அங்கு சென்றார். அவரது அடக்கம் முடிந்த பிறகு இவர் சம்பவ இடத்தில் இருந்த கிணற்றில் குளிக்க சென்றார்.

வெகு நேரம் ஆகியும் இவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்து வேலுவின் மகன் சத்யா (29) ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனின் இறுதிச்சடங்குக்கு வந்த தம்பி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story