நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறிப்பு



சென்னை அண்ணாநகரில் நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் 12-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜமுனியப்பன் (வயது 31). சார்பதிவாளரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராஜமுனியப்பனிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire