வீட்டின் மாடியில் நின்று செல்போன் பார்த்தவர் தவறி விழுந்து சாவு

களக்காடு அருகே வீட்டின் மாடியில் நின்று செல்போன் பார்த்தவர் தவறி விழுந்து இறந்தார்.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை ஆசாத்புரத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் கருணாகரன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ந் தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபற்றி அவரது தாயார் பேபி வசந்தா (63) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால் விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story