புகையிலை பொருட்களை விற்றவர் கைது

புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் நகர போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது கோவிந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 188 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





