புழலில் மாடியில் இருந்து குதித்து சிறை காவலர் தற்கொலை முயற்சி


புழலில் மாடியில் இருந்து குதித்து சிறை காவலர் தற்கொலை முயற்சி
x

புழலில் மாடியில் இருந்து குதித்து சிறை காவலர் தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை

புழல் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாலு (வயது 24). இவர் கடந்த 2017-ம் ஆண்டு சிறை காவலராக வேலைக்கு சேர்ந்தார். கடந்த 5 ஆண்டுகளாக புழல் ஜெயிலில் சிறை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அஸ்வினி என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு அவர் குடியிருப்பின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story