திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் சாவு


திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் சாவு
x

திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகிறார்கள்.


Next Story