வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு


வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
x

மானூர் அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

திருநெல்வேலி

மானூர்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 29). இவருக்கு சரண்யா (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தராஜ் நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் மானூர் அருகே உள்ள போலீஸ் காலனி செல்வ நந்தினி நகரில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் இருந்து ஆனந்தராஜ் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனந்தராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story