கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி


கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2023 7:00 PM GMT (Updated: 7 Aug 2023 7:01 PM GMT)

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செந்தில்குமார் (வயது 31). மாரிமுத்துவுக்கு பனவடலிசத்திரம் பசும்பொன்நகர் கீழ்ப்பக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று செந்தில்குமார் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள கிணற்று கல்லில் படுத்திருந்தார். அப்போது, அவர் எதிர்பாராவிதமாக கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி விஜயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி செந்தில்குமார் உடலை மீட்டனர். அவரது உடலை பனவடலிசத்திரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story