மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது


மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
x

மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). இவர் நேற்று அதே பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வரும் மளிகைக்கடைக்கு சென்று பன்னீர் சோடா கேட்டுள்ளார். இதையடுத்து சுப்பிரமணி கடைக்கு உள்ளே சென்று பன்னீர் சோடா எடுக்க சென்றார். அப்போது சரத்குமார் கடையின் கல்லாவில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடி உள்ளார். இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story