ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x

ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

லால்குடி:

ரெயிலில் அடிபட்டு சாவு

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் விஜயக்குமார்(வயது 32). இவர் லால்குடி மணக்கால் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கூலி வேலை பார்த்து வந்தார். இவரை பார்ப்பதற்காக அவரது சகோதரர்களான கார்த்திக்(28), ஆனந்த்(26) ஆகியோர் நேற்று தாராநல்லூரில் இருந்து லால்குடிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் லால்குடி ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றபோது கார்த்திக் ரெயிலில் அடிபட்டதில், அவரது கை துண்டானது.

போலீசார் விசாரணை

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்தின் உடலை ெரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story