கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்


கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
x

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நயினார்குளம் புதியபாலம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டு இருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தச்சநல்லூர் கீழ ஊருடையார்புரத்தை சேர்ந்த முத்துகுமார் மகன் ஹரிஹரன் (வயது 22) என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு தச்சநல்லூர் போலீசில் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story