சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதல்; 13 பேர் படுகாயம்


சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதல்; 13 பேர் படுகாயம்
x

வண்டலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதியதில், 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து நேற்று காலை கும்மிடிப்பூண்டி நோக்கி 20 பக்தர்களுடன் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.

வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே செல்லும்போது திடீரென சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த 13 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story