கோவில் அருகே மயங்கி கிடந்த பெண் சாவு


கோவில் அருகே மயங்கி கிடந்த பெண் சாவு
x

கோவில் அருகே மயங்கி கிடந்த பெண் உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் சிவன் கோவில் அருகே கடந்த 5-ந் தேதி ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்த பெண்ணின் பெயர் புஷ்பா(வயது 50) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story