வாகனம் மோதி பெண் வியாபாரி சாவு


வாகனம் மோதி பெண் வியாபாரி சாவு
x

வாகனம் மோதி பெண் வியாபாரி இறந்தார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 60). வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவர் அரியலூர் சென்று சந்தையில் வெங்காய வியாபாரம் செய்துவிட்டு, இரூர் கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த வாகனம், பாப்பாத்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story