டயர் வெடித்து நிலைதடுமாறி ஓடிய லாரி கார் மீது மோதி பெண் பலி


டயர் வெடித்து நிலைதடுமாறி ஓடிய லாரி கார் மீது மோதி பெண் பலி
x

டயர் வெடித்ததால் நிலைதடுமாறி ஓடிய லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

செங்கம்

டயர் வெடித்ததால் நிலைதடுமாறி ஓடிய லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெங்களூருவை சேர்ந்த பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரில் சென்றார்

பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 42). இவர் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.

செங்கம் அடுத்துள்ள உச்சிமலைகுப்பம் அருகே வந்தபோது லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறி ஓடிய லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மருத்துவமனையில் அனுமதி

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சாந்தி, ரமேஷ், தர்மபுரி பகுதியை சேர்ந்த துரைராஜ், கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பானுமதி மற்றும் லாரியை ஓட்டி வந்த விழுப்புரத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சாந்தி வரும் வழியிலே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story